×

வச்சக்காரப்பட்டியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கோரி போராட்டத்திற்கு புறப்பட்ட மக்களிடம் நேரில் வந்து சமரசம்

விருதுநகர், செப். 25: விருதுநகர் அருகேயுள்ளது வச்சக்காரபட்டி ஊராட்சி. இங்கு துணைத்தலைவர் செயல்பாட்டிற்கு ஒத்துழைப்பு அளிக்காததால் ஊராட்சியில் அடிப்படை பிரச்னைகள் முடங்கி கிடக்கின்றன. குறிப்பாக சண்முகசுந்தரபுரத்தில் குடிநீர் மோட்டாரை சரிசெய்ய நிதியின்றி ஊராட்சி நிர்வாகம் தண்ணீர் தர முடியாமல் திணறி வருகிறது. கிராமக்களும் குடிநீர் கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் போராட்டம் நடத்த ஊராட்சி மற்றும் கலெக்டர் அலுவலகங்களுக்கு வர இருந்தனர். இதுபற்றி தகவலறிந்ததும் தாசில்தார் முத்துலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கிராமத்திற்கு நேரில் சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : struggle ,Vachakkarapatti ,
× RELATED நடிகை குஷ்புவை கண்டித்து 3-வது நாளாக பெண்கள் போராட்டம்..!!