×

கல்விக் கொள்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

திருப்புத்தூர், செப்.25:  திருப்புத்தூரில் அண்ணா சிலை அருகே சிவகங்கை சாலையில் சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பில், மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ரியாஸ் தலைமை வகித்தார். செயலாளர் அப்துல் காதர் அரபி முன்னிலை வகித்தார். இதில், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கமரல் ஜாமால் கண்டன உரை நிகழ்த்தினார். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறக்கோரியும், நீட்தேர்வை ரத்து செய்யக் கோரியும், தமிழக மாணவர்களின் உரிமையை பாதிக்கின்ற மத்திய அரசின் திட்டங்களுக்கு துணை போகும் மாநில அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் தமுமுக நகர செயலாளர் ராஜா முகமது, நகர் தலைவர் அமனுல்லா, மனிதநேய மக்கள் கட்சி  செயலாளர் சர்புதீன் மற்றம் பலர் பங்கேற்றனர்.

Tags : Demonstration ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்