×

35 கிலோ கஞ்சா பறிமுதல்

காரைக்குடி, செப்.25:  காரைக்குடி அருகே சாக்கோட்டை ஜெயங்கொண்டான் பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சாலை ஓரமாக கார் ஒன்று நின்றது. அதன் அருகே சாலையில் அமர்ந்து 3 பேர் மதுகுடித்து கொண்டு இருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பியோடி உள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்த போது அதில் மூட்டையில் 35 கிலோவுக்கு மேல் கஞ்சா இருந்துள்ளது.  போலீசார் கஞ்சா மற்றும் காரை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இேத போல் இளையான்குடி பகுதி முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். கஞ்சா விற்ற கீழாயூரைச் சேர்ந்த ஜாபர்அலி(46), இந்திரா நகரைச் சேர்ந்த ராஜா(27) ஆகியோரை பிடித்தனர். இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஒன்றரை கிலோ கஞ்சா, ரூ.10ஆயிரம் பறிமுதல் செய்து, ஜாபர்அலி, ராஜாவை கைது செய்தனர். 

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ