×

ஓமலூரில் விதி மீறிய கடைகளுக்கு சீல்

ஓமலூர், செப். 25: ஓமலூரில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் வபேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் பெரியசாமி தலைமையில், கூட்டம் அதிகமாக கூடும் கடைகளை கண்காணித்து நோய் தடுப்பு மற்றும் கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி, மேட்டூர் சாலையில் நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற தவறிய உணவகம், பேருந்து நிலையத்தில் நகைக்கடை, உள்பட 5 கடைகளுக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து செந்தூர் டீக்கடைக்கு ரூ.5,000 அபராதம் விதித்தனர்.

Tags : shops ,Omalur ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி