வேலூர், செப்.25: குடியாத்தத்தில் சுற்றித்திரிந்த கர்நாடக மாநிலம் கேஜிஎப்பை சேர்ந்த சிறுவன், அவரது 2 தங்கைகளை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் பஸ் நிலையம் பகுதியில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சிறுவன், 2 சிறுமிகள் சுற்றித் திரிந்து கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரித்ததில் பசியுடன் இருந்தது தெரியவந்தது.