திருச்செந்தூர், செப். 25: திருச்செந்தூரில் கூடுதலாக 108 ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கிவைத்தார்.
தமிழக முதல்வரால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட தலா ரூ.18 லட்சம் மதிப்பிலான 2 கூடுதல் ஆம்புலன்ஸ் வாகன சேவை துவக்கவிழா திருச்செந்தூரில் நடந்தது. விழாவுக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். எஸ்பி ஜெயக்குமார், எம்.எல்.ஏ.க்கள் வைகுண்டம் சண்முகநாதன், விளாத்திகுளம் சின்னப்பன், ராதாபுரம் இன்பதுரை முன்னிலை வகித்தனர். இதனிடையே விழாவையொட்டி தமிழக முதல்வரால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட தலா ரூ.18 லட்சம் மதிப்பிலான 2 கூடுதல் ஆம்புலன்ஸ் வாகன சேவையை அமைச்சர் கடம்பூர் ராஜூ கொடியசைத்து துவக்கிவைத்து அதன் சாவிகளை டிரைவரிடம் வழங்கினார்.