ஆத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநருக்கு அரிவாள் வெட்டு

ஆறுமுகநேரி, செப். 25:   தூத்துக்குடி முத்தையாபுரம் ஜெ.எஸ். 7வது தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ் மகன் முனியசாமி (37). இவர் கடந்த 1 வருடமாக ஆத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுநராக வேலை பார்த்து வருகிறார். அதே ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஹெல்த் இன்ஸ்பெக்டராக அந்தோணிராஜ் பணியாற்றி வந்துள்ளார்.  கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஹெல்த் இன்ஸ்பெக்டர் அந்தோணிராஜ் மூக்குப்பீறிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  இந்நிலையில் நேற்று காலை ஆத்தூர் சுகாதார நிலையத்திற்கு வந்த அந்தோணிராஜ் மற்றும் அவருடன் வநத் ஒருவரும், அங்கு பணியிலிருந்த முனியசாமியிடம் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.  பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தலையில் வெட்டி கொலை மிரட்டல் விடுத்து  தப்பி சென்றனர்.  இதில் பலத்த காயமடைந்த அவர் அங்கேயே முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Related Stories: