அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையவழி கலந்தாய்வு இன்று நிறைவு

திருப்பூர்,  செப்.25:  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி  நிலையங்களில் சேர இணையவழி கலந்தாய்வுக்கு இன்று கடைசி நாளாகும்.இது குறித்து திருப்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:திருப்பூர்  மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி  நிலையங்களில் 2020-ம் கல்வியாண்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில்  பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் இணையவழி மூலமாகப் பெறப்பட்டன.  இந்தக் கலந்தாய்வு இணைய வழியில் நடைபெறவுள்ளதால் பொதுப்பிரிவினர் (முன்னுரிமை  இல்லாத அனைத்து விண்ணப்பதாரர்களும்) தங்களுக்கு விருப்பமான 25  தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழிற்பிரிவுகளை செப்டம்பர் 23 முதல் 25ம்  தேதிக்குள் தேர்வு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்து.

இந்த  நாட்களில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்த தொழில் பயிற்சி நிலையம்  மற்றும் தொழிற்பிரிவுகளை மாற்றம் செய்து கொள்ள முடியும். இதையடுத்து,  விண்ணப்பதாரர்களின் தரவரிசை, இன சுழற்சி முறை மற்றும் அவர்கள் கலந்தாய்வில்  தேர்வு செய்த தொழிற்பயிற்சி நிலையம், தொழிற்பிரிவுகள் அடிப்படையில்  தற்காலிக சேர்க்கை ஆணை இணையவழியில் வழங்கப்படும். ஆகவே, கலந்தாய்வுக்கான  கடைசி நாள் 25ம் தேதி (இன்று) என்பதால் விண்ணப்பதாரர்கள் தொழிற்பயிற்சி  நிலையம் மற்றும் தொழிற்பிரிவுகளை தேர்வு செய்வதில் இடர்பாடுகள்,  சந்தேகங்கள் இருந்தால் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை அருகே உள்ள  அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை நேரில் அணுகலாம்.

அதேபோல், தாராபுரம்,  உடுமலையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களையும் அனுகலாம். இவ்வாறு  அதில் கூறியுள்ளார்.

Related Stories: