கோவை, செப். 25: கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளதாவது: பொது இடங்களில் எச்சில் துப்புதல், தனிநபர் சமூக இடைவெளி விதிமுறைகளை மீறுதல், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அரசின் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அதற்கேற்ப அபராதம் விதிக்கப்படும்.
முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.200, பொது இடங்களில் எச்சில் துப்புபவருக்கு ரூ.500, தனிநபர் சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்களுக்கு ரூ.500 மற்றும் அரசின் வழிகாட்டுதல்களை கடைபிடிக்காத வியாபார நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.