கோவை, செப்.25: கோவை திருமலையம்பாளையம், பாலத்துறை, நாச்சிபாளையம் வழியாக கேரள மாநிலத்திற்கு அனுமதியின்றி எம்.சாண்ட், ஜல்லி கற்கள், போல்டர் கற்கள் கொண்டு செல்வதாக புகார் வந்தது. இது ெதாடர்பாக கனிம வளத்துறையினர், வருவாய்த்துறை, போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. நேற்று திருமலையம்பாளையம் வழியாக வேலந்தாவளம் வழியாக கேரளா சென்ற டிப்பர் லாரிகளை பொதுமக்கள் மடக்கி பிடித்து சிறைவைத்தனர். எம்.சாண்ட், ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரிகள் பெரும்பாலானவை திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக திருமலையம்பாளையம் பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘எம்.சாண்ட், கிராவல் மண், ஜல்லி, போல்டர் கற்கள் எடுக்க கேரள மாநிலத்தில் கடும் கட்டுப்பாடு இருக்கிறது. கோவையில் இருந்து கனிம வளத்துறையின் அனுமதியின்றி கனிம பொருட்கள் கேரளாவிற்கு தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. அங்கே அதிக விலைக்கு கனிம பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள்.