ஈரோடு, செப்.25: ஒரே அலுவலகத்தில் 2 கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ.) பணியாற்றி வருவதால் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. பெருந்துறை வட்டம், வெள்ளோடு உள்வட்டத்தில் தென்முகம் வெள்ளோடு, வடமுகம் வெள்ளோடு என இரண்டு கிராம நிர்வாக அலுவகங்கள் காமராஜர் நகரில் தனித்தனியாக கட்டப்பட்டுள்ளன. ஆனால், கடந்த சில நாட்களாக தென்முகம் வெள்ளோடு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலேயே வடமுகம் வெள்ளோடு அலுவலகமும் செயல்பட்டு வருகிறது
இரண்டு அலுவலகங்களும் ஒரே அலுவலகத்தில் செயல்படுவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனால், கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.