மதுரை, ஆக.22: மதுரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் போலீஸ் செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா மருத்துவமனைக்கு வரும் மற்றும் மருத்துவமனையிலிருந்து வெளியே செல்பவர்களிடம் விசாரணை நடத்தி அனுமதி வழங்குவது உள்ளிட்ட பணிகளை இந்த செக்போஸ்ட்டில் உள்ள போலீசார் மேற்கொண்டு வந்தனர். இந்த செக்போஸ்ட் பணிக்கு, மதுரை அரசு மருத்துவமனை காவல் நிலையத்திலிருந்து சுழற்சி முறையில் போலீசார் நியமிக்கப்படுகின்றனர். இந்நிலையில் சில தினங்கள் முன்பு இந்த ேபாலீஸ் செக்போஸ்ட்டில் பணியாற்றி வந்த எஸ்ஐ ஒருவர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி, இதே மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.