மேலூர், ஆக. 22: மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டியை சேர்ந்தவர் வீரணன் மனைவி மகமாயி(52). இவர் தெற்குதெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றுள்ளார். ஏடிஎம் கார்ட்டை பயன்படுத்தி பணம் எடுக்க தெரியாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவரிடம் தனக்கு பணம் எடுத்து தரும்படி தனது கார்டை கொடுத்து, பின் நம்பரை கூறி உள்ளார். அந்த வாலிபர் இயந்திரத்தில் கார்டை நுழைப்பது போல் நடித்து, பணம் வரவில்லை என கூறிவிட்டு, கார்ட்டை மகமாயிடம் கொடுத்து விட்டு சென்றுவிட்டார்.