திண்டுக்கல், ஆக. 22: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்த நிலையில், தற்போது பாதிப்பு குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு பிறகு சித்தா மருத்துவமனை, தமிழ் மருந்து கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சித்த மருந்துகள்- தமிழகத்தில் இயற்கையாக பயன்படுத்தப்பட்டு வரும் கிராமத்து மருத்துவ முறைகள் பலன் கொடுப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் இஞ்சி, விரலி மஞ்சள், சீரகம், மிளகு உள்ளிட்ட பொருட்களே கொரோனா வைரஸ் தடுப்பிற்கான நோய் எதிர்ப்பு சக்திக்காக பரிந்துரைக்கப்படுகிறது.