திண்டுக்கல், ஆக. 22: திண்டுக்கல் மாவட்டத்தில் மனித உயிர்களை மீட்டதில் துணிச்சலுடன் போராடி வீரத்துடன் செயல் புரிந்தவர்களுக்கு “ஜீவன் ரக்ஷா விருது” பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 2020ம் ஆண்டிற்கு இந்திய அரசின் சார்பில் பல்வேறு நிகழ்வுகளான நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சாரம்- தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் வீரத்துடன், துணிச்சலுடன் போராடி மனித உயிர்களை மீட்டவர்களுக்கு ‘ஜீவன் ரக்ஷா விருது’ என்ற பெயரில் சர்வோதம் ஜீவன் ரக்ஷா விருது, உத்தம் ஜீவன் ரக்ஷா விருது மற்றும் ஜீவன் ரக்ஷா விருது வழங்கப்படுகின்றன. இவ்விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.