×

மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பலி

அந்தியூர், ஆக.22: அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ் (38). இவர், இதே பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் அம்மை நோய் இருந்ததால், முத்துராஜின் தந்தை வீடான வெள்ளயம்பாளையத்திற்கு சென்றுவிட்டனர். இதனால் மனமுடைந்த முத்துராஜ், மதுவுக்கு அடிமையானார். இந்நிலையில், கடந்த 10ம் தேதி மது அருந்துவிட்டு போதையில் இருந்த அவர், வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை