×

குடும்ப தகராறில் மனைவி தற்கொலை

ஈரோடு, ஆக.22: பெருந்துறை காடபாளையத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மனைவி சரண்யா என்ற பூங்கோதை (29). இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை இருந்து வந்தது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு நடந்த சண்டையில் பூங்கோதை வீட்டில் விஷம் குடித்து தற்கொைல செய்து கொண்டார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை