செங்கோட்டை, மார்ச் 20:செங்கோட்டையில் குடிநீர் குழாய் உடைந்து 3 மாதமாக ஓடையில் கலப்பதால் 12 கிராம மக்கள் தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க கடந்த 2003ம் ஆண்டு ரூ.2,036 லட்சம் செலவில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்காக கட்டளைகுடியிருப்பில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு கட்டளைகுடியிருப்பு, கற்குடி, கேசவபுரம், பூலாங்குடியிருப்பு, புளியரை, தெற்குமேடு, புதூர், லாலாகுடியிருப்பு, தவணை, வேம்பநல்லூர், பகவதிபுரம், கோட்டைவாசல் உட்பட சுமார் 12 கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன.