களக்காடு, மார்ச் 20: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் களக்காடு தலையணை வெறிச்சோடி காட்சி அளிக்கிறது.சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளையே புரட்டி போட்டுள்ளது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக சுற்றுலா தளங்களை மூடவும் அரசு உத்தரவிட்டுள்ளது.