×

ரயில் முன் பாய்ந்து பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை

உளுந்தூர்பேட்டை,  மார்ச் 20: உளுந்தூர்பேட்டை பேரூராட்சி ஈஸ்வரன்கோயில் தெருவில் வசித்து  வருபவர் வேலாயுதம். அரசு போக்குவரத்து கழக பணியாளர். இவருடைய மகன்  பாரதிகண்ணன்(22) என்பவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு  செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அவரது பெற்றோர்  செல்போனில் பேசுவதை நிறுத்திவிட்டு தூங்குமாறு கூறியுள்ளனர். இதன் பிறகு  வீட்டில் இருந்து சென்ற பாரதிகண்ணனை காணவில்லை என தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை உளுந்தூர்பேட்டை நகர் ரயில்நிலையம் அருகில்  துண்டு, துண்டாக சடலமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ  இடத்திற்கு வந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பாரதிகண்ணன் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு  ஏதாவது காரணமா என்பது குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை செய்து  வருகின்றனர்.

Tags : student ,Engineering College ,suicide ,
× RELATED சேது பொறியியல் கல்லூரியில் ஊக்கத்...