×

தார்பாய் போட்டு மூடாமல் ஜல்லிகளை சாலையில் இறைத்தபடி செல்லும் லாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


க.பரமத்தி, மார்ச் 19: க.பரமத்தியில் கிரஷர் ஜல்லி அளவிற்கு அதிகமாக பாரம் ஏற்றி கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் இறைத்த படி செல்லும் லாரிகளை தார் பாய் கொண்டு மூடி பாதுபாப்பாக கொண்டு செல்ல போலீசார் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டுமென இரு சக்கர வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். க.பரமத்தி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிரஷர் மற்றும் கல்குவாரிகள் உள்ளன. இப்பகுதியில் கல்குவாரிகளில் இருந்து வெடி வைத்து வெட்டி எடுக்கப்பட்ட கற்களை கிரஷர் மூலம் அரைக்கப்பட்டு அரை, முக்கால், ஒன்றரை, சிப்ஸ் என பல வகைகளில் பிரித்து தயாரிக்கப்படுகிறது.

இங்கு தயாரிக்கப்படும் கிரஷர் ஜல்லி கற்களை கிழக்கு மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட பல்வேறு பகுதிகளுக்கு வீடு, கடைகள், கட்டவும் தார்சாலை அமைக்கவும் பயன்படுத்த க.பரமத்தி சுற்று வட்டார பகுதியிலிருந்து தினசரி நூற்றுக்கணக்கான டாரஸ் மற்றும் லாரிகளில் செல்ல வேண்டிய இடங்களுக்கு கிரஷர் ஜல்லி பாரம் ஏற்றி செல்கின்றனர். அவ்வாறு லாரிகளில் பாரம் ஏற்றி செல்லும் சில லாரி டிரைவர்கள் ஜல்லி பாரத்தை தார்பாய் கொண்டு மூடி செல்லாமல் அப்படியே செல்கின்றனர்.

இதனால் லாரி வேகமாக செல்லும் போது ஜல்லி கற்கள் தேசிய நெடுஞ்சாலையில் இறைத்து படி செல்கிறது. இதனால் பின்னால் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி சிறு சிறு விபத்துக்கள் ஏற்படுகிறது. இது மட்டுமல்லாது. இரு சக்கர வாகன ஓட்டிகள் கண்களில் விழுந்து கண் எரிச்சல் ஏற்படுவதாகவும், சில நேரங்களில் சிறு சிறு விபத்துக்கள் ஏற்பட காரணமாக அமைகிறது என பாதிக்கப்பட்ட பலரும் கவலை தெரிவிக்கின்றனர். எனவே அளவுக்கு அதிகமாக ஜல்லி கற்கள் நெடுஞ்சாலையில் இறைத்து படி செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : road ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...