×

ஒருவருக்கொருவர் பேசுவதற்கு 1 மீ இடைவெளி விட வேண்டும்

தோகைமலை. மார்ச் 19: தோகைமலை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஒருவருக்கு ஒருவர் 1 மீட்டர் இடைவெளிவிட்டு பேச வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர். கரூர் மாவட்டம் தோகைமலை பேருந்துநிலையத்தில் கொரானா வைரஸ் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் தியாகராஜன், வட்டார சுகாதார ஆய்வாளர் ராமசாமி, சுகாதார ஆய்வாளர் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ அலுவலர்கள் நரேஸ், வினோதா ஆகியோர் கலந்து கொண்டு கொரோனா வைரஸ் குறித்து செய்முறை விளக்கத்துடன் விழிப்புணர்வு அளித்தனர். அப்போது கொரோனா வைரஸ் மனிதனின் சுவாச பாதையை தாக்குவதால் எளிதாக மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதனை தாக்குகிறது. கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, தொண்டைவலி, வரட்டு இருமல் மற்றும் மூச்சு திணறல் ஏற்படுகிறது.

இதற்கு அடுத்தகட்டமாக கடுமையான உடல் வலி ஏற்பட்டு நிமோனியா வந்து கிட்னி செயல் இழக்கிறது. இறுதியில் திடீர் மரணம் ஏற்படுகிறது. மனிதனின் சுவாச பாதையை தாக்குவதால் வைரஸ் பாதித்த நபரின் இருமல், தும்மல் மூலம் எளிமையாக பரவுகிறது. மேலும் வைரஸ் பாதித்த நபர் பயன்படுத்திய பொருட்களை தொடுவது மூலமும் பரவுகிறது. கொரானா வைரஸ் மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவுவதால் வைரஸ் தாக்கிய நபரை தொடாமல் இருப்பதன் மூலம் வைரஸ் நமக்கு பரவாமல் பார்த்து கொள்ளலாம். கொரோனா வைரஸ் தாக்குவதில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள வைரஸ் தக்கிய நபரிடம் இருந்து நாம் தள்ளி இருக்க வேண்டும். குறைந்தது 20 வினாடிகளுக்கு கையை நன்றாக தேய்த்து கழுவுதல் வேண்டும். தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்.

ஆகவே பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்கு வரும்போதும், வெளியில் செல்லும்போதும் சோப்பு போட்டு நன்றாக கையை தேய்த்து கழுவுதல் வேண்டும். அதேபோல் தங்களது வீடுகளுக்கு வரும் உறவினர்களையும் நன்றாக கையை தேய்த்து கழுவிய பின்பு உள்ளே அனுமதிக்க வேண்டும். ஒருவருக்கு ஒருவர் குறிப்பிட்ட (1 மீட்டர்) இடைவெளி விட்டு பேசுதல் வேண்டும். மற்றவர் இருமினாலும், தும்மினாலும் அல்லது நாம் இருமினாலும், தும்மினாலும் வாய் மற்றும் மூக்கு பகுதியை கை அல்லது துணியால் மறைக்க வேண்டும். எச்சிலை கண்ட இடத்தில் துப்புதல் கூடாது. தேவைப்படும்போது சுகாதார நிலையத்தை அணுகி கிரிமி நாசினி தெளித்தல் வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். மேலும் கை கழுவும் முறைகள் குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் பேருந்து நிலையத்திற்குள் வரும் பேருந்துகளின் பயனிகள் ஏறும் படிக்கட்டுகள், பேருந்தின் சக்கரம், பேருந்தின் உள்ளே உள்ள பயனிகள் நடைபாதை, கைபிடி கம்பிகள் ஆகிய இடங்களில் கிருமி நாசினி தெளித்தனர். இந்த நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உஷா மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : space ,each other ,
× RELATED இஸ்ரோ தகவல் இன்சாட் 3டிஎஸ் விண்கலம் பூமியை படம் எடுத்தது