×

கொரோனா வைரஸ் எதிரொலி மக்கள் குறைதீர் கூட்டம் 31ம் தேதி வரை நிறுத்தம்

தூத்துக்குடி, மார்ச் 19:  கொரோனா வைரஸ் எதிரொலியாக தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் உள்ளிட்டவை வரும் 31ம் தேதி வரை நிறுத்திவைக்கப்படுவதாக கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை கலெக்டர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மாதந்தோறும் கலெக்டர் தலைமையில் கிராமப்பகுதியில் நடைபெறும் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மற்றும் அம்மா திட்ட முகாம்கள், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் போன்றவை கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை காரணமாக மார்ச் 31ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. பொது மக்கள் அவசரமான கோரிக்கை மனுக்கள் குறித்த விவரங்களை collrtu@nic.in என்ற இணையதள முகவரியில் அல்லது (or)  Call Your Collector Whats App Number 8680800900 எனும் எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அல்லது 0461 - 2340101 என்ற தொலைபேசியிலோ தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Coronavirus Echoes People's Oversight Meeting ,
× RELATED குழித்துறை மறைமாவட்ட பொது நிலையினர் அமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு