×

திருப்பூர் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்பட துவக்கம்

திருப்பூர், மார்ச் 19:திருப்பூர் ரயில் நிலையத்தில் சமீபத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் செயல்பட தொடங்கியுள்ளது. திருப்பூர் ரயில் நிலையத்தில் தானியங்கி நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் குற்ற சம்பவங்களை கண்காணிக்கும் வகையில் ரயில் நிலையத்தில் 27 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டது. அதன்படி திருப்பூர் ரயில் நிலைய வளாகம், டிக்கெட் முன்பதிவு மையம், 1, 2வது நடைமேடை உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் சமீபத்தில் பொருத்தப்பட்டது. இந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பதிவு செய்யும் வகையில் கட்டுப்பாட்டு அறை 2வது நடைமேடையில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதமாக நடைபெற்று வந்த இந்த பணிகள் நிறைவடைந்து கண்காணிப்பு கேமராக்கள் நேற்று முதல் செயல்பட தொடங்கியுள்ளன. மேலும் கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவு செய்யபட்டு வருகிறது. தற்போது ரயில் நிலையத்தில் மேலும் 13 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கேமராக்கள் பொருத்தும் பணி நிறைவடைந்ததும் கட்டுப்பாட்டு அறை ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்படைக்கப்படும்.

Tags : railway station ,Tirupur ,
× RELATED மானாமதுரை ரயில்நிலையத்தில் மீண்டும்...