வாலிபருக்கு கத்திக்குத்து உறவினர் கைது

கோவை, மார்ச்.19: கோவை புலியகுளம் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் ராகவன் (28). இவருடைய மனைவி ராஜூ. இவர் குடும்ப பிரச்னை காரணமாக தனது மகனை அழைத்துக் கொண்டு பெரியார் நகரில் வசிக்கும் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் ராகவன் தனது மனைவியை அழைத்து வர மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கும், ராஜூவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த ராஜூவின் அண்ணன் வீரமணி (32) ராகவனை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வீரமணி, கத்தியால் ராகவனை குத்தினார். இதில் அவருக்கு கழுத்தில் கத்தி குத்து விழுந்தது. காயமடைந்த ராகவன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர்.

Related Stories: