×

15 வயது சிறுமி பலாத்காரம் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி, மார்ச் 19: ஓசூர் அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிக்கு, 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் கேசவன். இவரது மகன் அருள்ராஜ்(25). இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதே போல், கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது திருமணம் செய்து கொள்ள அந்த சிறுமி வற்புறுத்தியபோது அதற்கு அருள்ராஜ் மறுத்துள்ளார்.

இதையடுத்து, அந்த சிறுமி ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் இதுகுறித்து புகாரளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, அருள்ராஜை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில், சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக அருள்ராஜூக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து அருள்ராஜை போலீசார் வேலூர் சிறையில் அடைத்தனர். அரசு தரப்பில் வழக்கறிஞர் கலையரசி ஆஜரானார்.

Tags : rape worker ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா