×

பஸ் நிலையத்தில் வக்கீல் மர்மசாவு

தர்மபுரி, மார்ச் 19: தர்மபுரி நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல்(52). இவர் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் வெற்றிவேல் நேற்று முன்தினம் மாலை சொந்த வேலை விஷயமாக பாலக்கோடு வரை சென்றிருந்தார். பின்னர் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து தர்மபுரி பஸ்நிலையத்தில் வெற்றிவேல் இறந்து கிடப்பதாக சித்ராவுக்கு தகவல் கிடைத்தது.

இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெற்றிவேலின் உடலை பார்த்து கதறி அழுதார். இதைத்தொடர்ந்து தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சடலத்தை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சித்ரா தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக, போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வக்கீல் மாரடைப்பால் இறந்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தர்மபுரி டவுன் போலீசார் தொடர்ந்து விசாணை நடத்தி வருகின்றனர்.

Tags : Marmazou ,lawyer ,bus station ,
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்