ஆலங்குளம், பிப். 28: ஆலங்குளம் அருகே நாலங்குறிச்சி யை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (46). இவர், வீட்டினருகே டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை கோபால கிருஷ்ணன் மனைவி பிச்சம்மாள் (45), கடையில் இருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர், திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் பிச்சம்மாளின் கழுத்தில் கிடந்த 50 கிராம் செயினை பறித்து கொண்டு தப்பினர். இதன் மதிப்பு ரூ.1.50 லட்சம் இருக்கும். இதுகுறித்து பிச்சம்மாள் சீதபற்பநல்லூர் போலீசில் புகார் செய்தார்.