×

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டத்தை கைவிட்டு சட்டத்தை படிக்க வேண்டும்

திருச்சி, பிப்.28: திருச்சியில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடந்தது.  கூட்டத்தில் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கலந்துகொண்டு பேசியதாவது: குடியுரிமை சட்டத்திருத்திற்கு எதிராக போராடுவதற்கு இந்தியா முழுவதும் முஸ்லீம்கள் தூண்டப்படுகிறார்கள். அரசியல் லாபத்திற்காக முஸ்லிம்களை பயன்படுத்தும் அரசியல் கட்சிகள் அவர்களுக்கு எதிரானது என இல்லாததை சொல்லி வருகிறார்கள். பாக்கிஸ்தான், பங்களாதோஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக குடியேரியவர்களுக்கு தான் இந்த சட்டம். முஸ்லிம்கள் போராட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு சட்டத்தை படிக்க வேண்டும். எல்லா போராட்டமும் வெற்றி பெறாது. வெளிநாட்டிலிருந்து குந்தகம் விளைவிக்க கூடியவர்களுக்கு குடியுரிமை வழங்கக்கூடாது என்ற அடிப்படையில்தான் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றார்.

Tags : fight ,
× RELATED எலக்சன் பர்ஸ்ட் லுக் வெளியானது