மாற்று இடம் வழங்க நடவடிக்கை 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சி, பிப். 28: பணி நிரந்தரம் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் சிவகுமார் தலைமை வகித்தார். இதில், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், பணிவிதிகளை உருவாக்க வேண்டும். உபரி பணியாளர்களை காலியாகவுள்ள அரசு மற்றும் அரசுத்துறை நிறுவனங்களில் பணியமர்த்தம் செய்ய வேண்டும். முறையற்ற ஆய்வுகளை தடுத்து நிறுத்த வேண்டும். மதுபான காலி அட்டை பெட்டிகளுக்கான நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: