×

திருச்சி விமான நிலையத்திலிருந்து மார்ச் 28 முதல் 3 புதிய விமான சேவை தொடக்கம்

திருச்சி, பிப்.28: திருச்சி விமான நிலையத்திலிருந்து மார்ச் 28ம் தேதி முதல் 3 புதிய விமான சேவைகள் தொடங்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கைகளான புதுடெல்லி, மும்பை, அபுதாபி, பெங்களூரு, ஹைதரபாத், திருப்பதி, அஹமதாபாத், போன்ற இடங்களுக்கு விமான சேவைகளை திருச்சியில் இருந்து தொடங்க வலியுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து எம்பி., திருநாவுக்கரசர் மத்திய சிவில் விமான சேவை அமைச்சகத்தை பலமுறை தொடர்பு கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியதின் பேரில் முதல் கட்டமாக ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் நிறுவனம், திருச்சியிலிருந்து புதுடெல்லி (மதுரை வழி) தினசரி விமான சேவை, திருச்சியிலிருந்து அபுதாபி (புதன், வெள்ளி, ஞாயிறு) ஆகிய நாட்களில் சேவை, திருச்சியிலிருந்து தோஹா(கத்தார்), செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் விமான சேவை என வரும் மார்ச் 28ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. எஞ்சிய விமான சேவைகளை விரைந்து பெற்றிட எம்பி தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறார். இந்த முயற்சியை 2016ம் ஆண்டு முதல் திருச்சி விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆச்சர் சிங் செய்தார். இத்தகவலை விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினர் பேட்ரிக் ராஜ்குமார் தெரிவித்தார்.

Tags : airline ,airport ,Trichy ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...