உளுந்தூர்பேட்டை, பிப். 28: உளுந்தூர்பேட்டை பேரூராட்சி பேருந்து நிலையம் எதிரில் ஒரு வழக்கு தொடர்பாக பாரிவள்ளல் தெருவை சேர்ந்த முருகன் மகன் பாட்டில்மணி என்கிற மணி என்பவரை உளுந்தூர்பேட்டை போலீசார் தீபன் மற்றும் கிஷோர்குமார் ஆகியோர் கைது செய்ய முயன்றனர். அப்போது மணி கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாகவும், சோடா பாட்டிலால் தாக்கி கொலை செய்து விடுவேன் எனவும் போலீசாருக்கு என மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை காவல்நிலைய சப்இன்ஸ்பெக்டர் கோபி வழக்கு பதிந்து மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.