ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

திருக்கோவிலூர், பிப். 28: திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை பகுதியில் சுமார் 10 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் நெடுஞ்சாலை மற்றும் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளதால் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மணலூர்பேட்டையை சுற்றி 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளதால் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்க தினந்தோறும் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது திருவண்ணாமலை சாலையில் ஆக்கிரமிப்பால் தொடர்ந்து விபத்துகள் மற்றும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஆகையால் வளர்ந்து வரும் மணலூர்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சம்பந்தப்பட்ட துறையினர் ஆக்கிரமிப்பு

களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: