பழங்குடியினருக்கு இலவச மருத்துவ முகாம்

செஞ்சி, பிப். 28: செஞ்சியில் பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் பழங்குடியினருக்கு சிறப்பு மருத்துவ முகாம் சந்தைமேடு பகுதியில் நடந்தது. இதில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் பழங்குடியினருக்கு மருத்துவ காப்பீடு ஆணையை வழங்கினார். செஞ்சி எம்எல்ஏ மஸ்தான், திண்டிவனம் சார் ஆட்சியர் டாக்டர். அனு, உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவகிருஷ்ணன், சுகாதாரத்துறை இணை இயக்குனர் சண்முக கனி, துணை இயக்குனர் செந்தில்குமார், பேரூராட்சி செயல் அலுவலர், டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறையினர் கலந்து கொண்டனர். முகாமில் பொது மருத்துவம், சித்த மருத்துவம், குடும்பநல மருத்துவம், காசநோய் மருத்துவம், முழு உடல் பரிசோதனை, ரத்த பரிசோதனை, சர்க்கரை வியாதி உள்ளிட்ட மருத்துவ பரிசோதனையும் நடந்தது.

Related Stories: