கள்ளக்குறிச்சி, பிப். 28: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகர்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டுகள் மறுவரையறை ஆணைய கருத்துக்கேட்பு கூட்டம் வருகிற 5ம்தேதி நடக்கிறது. இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு தயார் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சார்ந்த ஒரு நகராட்சியின் வார்டுகள், 7 பேரூராட்சிகளின் வார்டுகள், 9 ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய கிராம ஊராட்சிகளின் வார்டுகள், ஊராட்சி ஒன்றியங்களின் வார்டுகள் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டுகளின் மறுவரையறை வரைவு குறித்தான கோரிக்கைகள் கடந்த 18 ம் தேதி முதல் 22ம் தேதி வரை மனுக்களாக பெறப்பட்டுள்ளது.