தேமுதிக பிரமுகரின் தோட்டத்தில் மர்ம விலங்கு கடித்து ஆடு, கோழிகள் சாவு

ஆத்தூர், பிப்.28: தேமுதிக பிரமுகரின் தோட்டத்தில் மர்ம விலங்கு கடித்து ஆடு, மற்றும் கோழிகள் இறந்தன. ஆத்தூர் தெற்குகாடு பகுதியை சேர்ந்தவர் பெருமாள்(32). இவர், தேமுதிக நகர அவைத்தலைவராக உள்ளார். பெருமாள் அவரது உறவினர் கணபதியுடன் இணைந்து அதே பகுதியில் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து அதில் 10க்கும் மேற்பட்ட ஆடு, 10 நாட்டு கோழிகளை வளர்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் ஆடு, கோழிகளை பட்டியில் அடைத்து வைத்தனர். தொடர்ந்து நேற்று அதிகாலை ஆடு, கோழியின் சத்தம் கேட்டு எழுந்த பெருமாள் பட்டிக்கு சென்று பார்த்த போது, ஆடு, கோழிகள் கடித்து குதறிய நிலையில் இறந்து கிடந்தன. இதனையடுத்து,பெருமாள் அக்கம்,பக்கம் சென்று பார்த்த போது,மர்ம விலங்கின் நடமாட்டம் இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து கால்நடை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: