×

வாலிபர் மீது தாக்குதல் அண்ணன் தம்பிக்கு ஓராண்டு சிறை

சேலம், பிப். 28: சேலம் அருகே வாலிபரை தாக்கிய அண்ணன் தம்பிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
சேலம் இரும்பாலை அருகேயுள்ள வட்டமுத்தாம்பட்டி காமராஜர் நகரை சேர்ந்தவர் சுந்தர்(35). இவருக்கும் சத்யா(33) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. 1 மகன் உள்ளான். இந்நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த திருப்பதி(37) என்பவரை சத்யா, 2ம்திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த 2013ம்ஆண்டு செப்டம்பர் 21ம்தேதி முதல் கணவர் சுந்தருக்கும், 2வது கணவர் திருப்பதிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது சத்யா, திருப்பதியின் அண்ணன் கோவிந்தராஜ்(47) ஆகியோர் சேர்ந்து சுந்தரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவரது பல் உடைந்ததுடன் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில், இரும்பாலை போலீசார், திருப்பதி, அவரது மனைவி சத்யா, அண்ணன் கோவிந்தராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் 1வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் சையத் முகமது கவுஸ் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் செந்தில்குமார், சத்யாவை விடுதலை செய்ததுடன், கணவர் திருப்பதி, அவரது அண்ணன் கோவிந்தராஜ் ஆகியோருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் ₹250 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags : Brother ,
× RELATED அடிச்சாலும், புடிச்சாலும் நீயும்,...