வாழப்பாடி அருகே போலி ஆர்சி வைத்து ஓட்டிய லாரி பறிமுதல்

வாழப்பாடி, பிப்.28: வாழப்பாடி அருகே போலி ஆர்சி வைத்து ஓட்டிய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். வாழப்பாடி அருகே முத்தம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன், தண்ணீர் லாரி வைத்துள்ளார். இவர், தனது லாரிக்கான ஆர்சி புக்கை போலியான பெயரில் வைத்து ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் தனபாலன் வாகன தணிக்கை மேற்கொண்டார். அப்போது அவ்வழியாக வந்த லாரியை சோதனையிட்டார். அதில், போலியான ஆர்சி, எப்சி இல்லாமல் லாரியை ஓட்டி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து புதுப்பிக்கப்படாத ஆர்சி, மற்றும் எப்சி வைத்து லாரி, ஆட்டோ, டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டி வரும் நபர்களை கண்காணிக்க, போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: