முத்துக்குமார சுவாமி கோயில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை

ஆட்டையாம்பட்டி, பிப்.28: மருளையாம்பாளையத்தில் உள்ள முத்துக்குமார சுவாமி கோயிலில், உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆட்டையாம்பட்டி அடுத்துள்ள மருளையாம்பாளையத்தில் உள்ள முத்துக்குமார சுவாமி கோயிலில், நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் சிலர் கேட்டை உடைத்து சுவாமியின் முன் அமைக்கப்பட்ட உண்டியலை திருடிச்சென்றனர். நேற்று காலை, கோயிலை திறக்க பூசாரி வந்த போது,  கேட் உடைக்கப்பட்டு, உண்டியல் காணாதது கண்டு திடுக்கிட்டார்.

இது குறித்து அவர் பொதுமக்களுக்கு  தெரிவித்தார். தகவலின் பேரில், விரைந்த வந்த ஆட்டையாம்பட்டி போலீசார் நேரில் விசாரணை நடத்தினர். அப்போது, கோயில் பகுதியில் இருந்து ஒரு கி.மீ தொலைவிலுள்ள காட்டுப்பகுதியில் உண்டியல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பார்த்த போது, மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து, சுமார் அதிலிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு, உண்டியலை அங்கேயே போட்டு சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து உண்டியலை போலீசார் கைப்பற்றி கொள்ளையடித்து தப்பிய மர்ம கும்பலை சேர்ந்தவர்களை தேடி வருகின்றனர். பின்னர், கோயிலில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும் என கோயில் நிர்வாகத்தினருக்கு அறிவுரை வழங்கினர்.

Related Stories: