ஈரோடு, பிப்.28: ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த டிராபிக் சிக்னலுக்காக வடிவமைக்கப்பட்ட பழமையான தேர் வடிவிலான போலீஸ் கூண்டு அகற்றப்பட்டது. ஈரோட்டில் பன்னீர் செல்வம் பார்க் பகுதியில் பிரப் ரோடு, காந்திஜி ரோடு, திருவேங்கடசாமி வீதி, மணிக்கூண்டு ரோடு, கச்சேரி வீதி ஆகிய 5 சாலைகள் சந்திக்கும். இந்த பகுதியில், 24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கும். இங்கு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த டிராபிக் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சிக்னல்களை சீரமைக்க சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு தேர் வடிவிலான போலீஸ் கூண்டு வைக்கப்பட்டது. இந்த தேரில் போலீசார் அமர்ந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி வந்தனர். ஆனால், இந்த தேரில் பொருத்தப்பட்ட சக்கரங்களினால், பஸ், லாரி போன்ற கனரக வாகனங்கள் யூ டர்ன் செய்யும் போது மோதி விபத்துக்குள்ளாகி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.