×

புதுப்பெண் மாயம்

தர்மபுரி, பிப்.28: பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் ஆசிப். இவரது மனைவி அம்ரின்(19). இவர்களுக்கு திருமணமாகி இரண்டரை மாதம் ஆகிறது. கடந்த 24ம் தேதி, கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற அம்ரின், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஆசிப், பென்னாகரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா