×

வாலிபர் உள்பட 2பேர் தற்கொலை

தர்மபுரி, பிப்.28: காரிமங்கலத்தை அடுத்த பூமாந்தப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவன். இவருடைய மகன் தமிழரசு(19), கூலி தொழிலாளி. கடந்த சில நாட்களுக்கு முன், தமிழரசுவுக்கு ஒட்டுக்குடல் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார். ஆனாலும் வயிற்று வலி தொடர்ந்து இருந்து வந்ததால் மனமுடைந்து காணப்பட்ட தமிழரசு, நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து விட்டு மயங்கினார். அவரை மீட்ட குடும்பத்தினர், மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.  இதேபோல், தர்மபுரியை அடுத்த பச்சனம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சித்தரையன்(40). இவருக்கு வளர்மதி என்ற மனைவியும் ஒரு மகன், மகளும் உள்ளனர். இந்நிலையில், சித்தரையன் பல இடங்களில் கடன் வாங்கியதாக தெரிகிறது. அதனை திருப்பி செலுத்த முடியாததால் மனவேதனையுடன் காணப்பட்ட சித்தரையன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தர்மபுரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை