×

ரேஷன் கடையில் திருடியவர் கைது

சிவகாசி, பிப்.28: சிவகாசி அருகே சாமிபுரம் காலனியில் உள்ள ரேஷன் கடையின் மண்ணெண்ணெய் பேரல் வெளியே வைக்கப்பட்டிருந்தது. சிவகாசி சசிநகரை சேர்ந்த சதீஸ்(39) என்பவர் பேரலை உடைத்து மண்ணெண்ணெய்யை  திருடினார். இதை அப்பகுதியிலுள்ள மளிகை கடையில் விற்க முயற்சிக்கையில் ரேஷன் கடையில் திருடியது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷை கைது செய்தனர்.

Tags :
× RELATED தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்...