×

திருவில்லிபுத்தூரில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் கமிஷனரிடம் எம்பி வலியுறுத்தல்

திருவில்லிபுத்தூர், பிப்.28:  குடிநீர் உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் என திருவில்லிபுத்தூர் நகராட்சி கமிஷனரிடம் தென்காசி எம்பி தனுஷ்குமார் வலியுறுத்தினார். தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் எம்பி திருவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையர் சத்தியநாதனை சந்தித்தார். தென்காசி தொகுதிக்கு உட்பட்ட திருவில்லிபுத்தூர் பகுதி முழுவதும் குடிநீர் விநியோக பிரச்சினைகள், சுகாதார பிரச்சினைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். திருவில்லிபுத்தூர் பேருந்து நிலைய கழிவறையை சுத்தமாக பராமரிக்க வேண்டும். கோவில் நகரமான திருவில்லிபுத்தூருக்கு வந்து செல்லும் பக்தர்கள் தங்கி செல்ல வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சுகாதாரத்திற்கு எம்பி நிதியில் இருந்து உதவுவதாக கூறினார். திருவில்லிபுத்தூர் திமுக ஒன்றிய தலைவர் மல்லி ஆறுமுகம், திருவில்லிபுத்தூர் நகரச் செயலாளர் அய்யாவு பாண்டியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தங்கம் ரவிக்கண்ணன், சுகாதார ஆய்வாளர் சரவணன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : MB ,Commissioner ,Srivilliputhur ,
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...