×

பெரியகுளத்தில் 17வது நாளாக போராட்டம்

பெரியகுளம், பிப். 28: மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 17வது நாளாக இஸ்லாமியர்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா பங்கேற்று உரையாற்றினர். அப்போது, ‘சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.ஆர்.ஆர் உள்ளிட்ட சட்டங்களுக்கு ஆவணங்கள் கேட்டு இல்லங்களுக்கு வருவோரிடம் ஆவணங்களை வழங்க வேண்டாம். இதற்காக கைது செய்தால் அனைவரும் சிறைக்கு செல்வோம். மத்திய அரசு இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறும் வரை பேராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம்’ என தெரிவித்தார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியகுளம் எம்.எல்.ஏ.சரவணக்குமார், எண்டப்புளி உராட்சிமன்ற தலைவர் பாண்டியன், பெரியகுளம் நகர செயலாளர் முரளி, பி.டி.செல்லப்பாண்டியன், அபுதாகிர், பிச்சை, ஆண்டியப்பன், நேரு, கந்தன், முருகாயி காமராஜ், சன்னாசி, அப்பாஸ்கான் உட்பட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தர்ணா போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 17வது நாளாக தொடரும் போராட்டத்தையொட்டி பெரியகுளத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Periyakulam ,
× RELATED கோடை வெப்பத்தை தணிக்க கும்பக்கரையில் குவியும் பயணிகள்