×

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா

தேனி, பிப். 28: ஆண்டிபட்டியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா கொண்டாடப்பட்டது. ஆண்டிபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தென்னிந்திய தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ரிஷி கல்வி மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சீனியம்மாள் தலைமை வகித்தார். ஆண்டிபட்டி இன்ஸ்பெக்டர் உஷா முன்னிலை வகித்தார். தேனி வட்டார கல்வி அலுவலர் பாமாராணி விழாவை துவக்கி வைத்து பேசினார். இதில் முக்கிய பிரமுகர்கள் முத்துவெங்கட்ராமன், பாலகிருஷ்ணன், சுந்தர்ராஜன், கெப்புரெங்கன்பட்டி முருகன் ஆகியோர் பேசினர். விழாவின்போது, பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கான உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. விழா முடிவில் ரிஷி அறக்கட்டளை சுபா நன்றி கூறினார்.,


Tags :
× RELATED கஞ்சாவுடன் சுற்றி திரிந்த வாலிபர் கைது