×

காளையார்கோவிலில் இன்று கேஸ் குறைதீர் கூட்டம்

சிவகங்கை, பிப். 28: காளையார்கோவிலில் எரிவாயு (கேஸ்) நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று (பிப்.28) நடக்க உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்ததாவது: காளையார்கோவில் தாலுகா அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது. காளையார்கோவில் தாலுகாவில் உள்ள எரிவாயு நுகர்வோர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிலிண்டர் நிரப்புதல், சிலிண்டர் வழங்குவதில் காலதாமதம், கூடுதல் கட்டணம் வசூலித்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட எரிவாயு வழங்கல் சம்பந்தமான குறைகள் இருப்பின் புகார் செய்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

Tags : Case Oversight Meeting ,
× RELATED காளையார்கோவிலில் இன்று கேஸ் குறைதீர் கூட்டம்