×

கொரோனா பாதிப்பு இல்லை கலெக்டர் தகவல்

சிவகங்கை, பிப். 28: சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதித்தவர்கள் யாரும் கிடையாது. தற்போது சீனாவில் இருந்து வரும் நபர்கள் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அறிவுறுத்தல்படி பொது சுகாதாரத்துறையின் களப்பணியாளர்கள் மற்றும் மருத்துவக்குழுவின் மூலம் தினமும் தொடர்ந்து 28 நாட்களுக்கு வீட்டிலேயே கண்காணிப்பு செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் கோழிகள் மற்றும் விலங்கினங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. பொதுமக்கள் யாரும் இதுகுறித்து பீதி அடைய தேவையில்லை. மாமிசங்களை நன்கு வேகவைத்து சாப்பிடவும், இருமும் போதும், தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை கொண்டு மூடிக்கொள்ள வேண்டும். தினமும் 10 முதல் 15 முறை கைகளை சோப்பு போட்டு நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Corona ,No ,
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...