×

என்எஸ்எஸ் சிறப்பு முகாம்

கீழக்கரை, பிப். 28: முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் என்எஸ் எஸ் சார்பில் புதுமாயாகுளம் மற்றும் பாரதிநகர் கிராமங்களில் சிறப்பு முகாம் கடந்த பிப்.26 முதல் ஏழு நாட்கள் நடைபெறுகிறது. முகாம் துவக்க விழாவில் பாலிடெக்னிக் முதல்வர் அலாவுதீன் தலைமை வகித்தார். பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் அப்பாஸ் முகைதீன் முகமை துவக்கி வைத்தார். மாயாகுளம் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி பாக்கியநாதன் முன்னிலை வகித்தார். முன்னதாக திட்ட அலுவலர் ரஜேஷ்கண்ணா வரவேற்றார்.முகாமில் முதல்உதவி பயிற்சி, பொது மருத்துவ முகாம், கண் மருத்துவ முகாம், கடற்கரை தூய்மைபணி, பேரிடர் மேலாண்மை பயிற்சி, மரக்கன்று நடுதல், வாக்காளர் விழிப்புணர்வு, சுகாதார விழிப்புணர்வு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக திட்ட அலுவலர்கள் கூறினர். முகாம் ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ். மாணவர்களும் ஆசிரியர்களும் செய்திருந்தனர். திட்ட அலுவலர் வேல்முருகன் நன்றி கூறினார். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : NSS Special Camp ,
× RELATED கருத்தையாபுரத்தில் என்எஸ்எஸ் சிறப்பு முகாம்