சென்னை: பழவந்தாங்கல் நேரு காலனியை சேர்ந்த பிரதீப்குமார் (19) என்பவர், முதல்வர் தனிப்பிரிவில் புகார் ஒன்று அளித்தார். அதில், சென்னை பெருமாள் பேட்டையை ேசர்ந்த ராஜ்பரத் (35) என்பவர் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் இளநிலை அதிகாரியாக வேலை வாங்கி தருவதாக எனது நண்பர்கள் உட்பட 3 பேரிடம் தலா ரூ.3 லட்சம் பெற்று மோசடி செய்துவிட்டர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதுகுறித்து வேப்ேபரி போலீசார் விசாரணை நடத்தியபோது, ராஜ்பரத் வேலை வாங்கி தருவதாக 3 பேரிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. அவர் மீது ஐபிசி 406, 420 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். வில்லிவாக்கம் சிட்கோ நகரை சேர்ந்த இன்ஜினியர் யூவராஜ் (24), அதே பகுதியில் வீடு கட்டும் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் கழற்றி வைத்திருந்த உடையில் இருந்து 12 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதேபோல், அருகில் உள்ள 2 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது.